காலாவிற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு தலைவர் 165 என பெயரிட்டு ரசிகர்கள் அழைத்து வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் டேராடூன் ஆகிய இரு நகரங்களிலும் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது.

படத்தின் கதை உள்ளிட்ட எந்த விஷயமும் வெளியாகாத நிலையில் ரஜினிகாந்த் பேராசியராக நடிக்கிறார். ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என நிறைய தகவல்கள் பரவின. ஆனால் இவை எல்லாமே வெறும் வதந்திகள் என்று கூறிவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்போது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க ரஜினிகாந்த் நேற்று புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் படத்தின் தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க போவதாக தயாரிப்பு நிறுவனம் சன் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #Thalaivar165 என்ற ஹாஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பல ரசிகர்கள் இந்த படத்தின் தலைப்பு தலைவர் என்று அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *