அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களின் பொதுமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். அதற்கான வழிமுறைகள் தற்போது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் அரசுப் பள்ளியில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 17-ம்தேதி பணிநிரவல்கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து உபரி ஆசிரியர்களின் விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *