சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்க 10 இடங்களில் அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அபராதம் செலுத்தாத 9,526 பேரை அபராதம் செலுத்த சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்தனர்.

இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த 20-ம் தேதி 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராத தொகையாக ரூ.60,36,000 வசூலிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் 12,551 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.12,99,08,600 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *