சென்னை: மொரப்பூர் – தர்மபுரி இடையே 36 கி.மீ., புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தர்மபுரி மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 2019 – 20க்கான ரயில்வே பட்ஜெட்டில் மொரப்பூர் – தர்மபுரி இடையேயான புதிய ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இத்திட்டத்துக்கு ரயில்வே வாரியம் 359 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இப்பாதையில் இரண்டு பெரிய பாலங்கள் ஐந்து பெரிய சாலை மேம்பாலங்கள் 15 சுரங்க பாலங்கள் மற்றும் 24 சிறிய பாலங்கள் கட்டப்பட உள்ளன என ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *