குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை , விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

English Summary: Schools and Colleges has announced leave for some districts in Tamilnadu.