ஏரியில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என அறிவித்துள்ள பொதுப்பணித்துறை, ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 22 அடியை நெருங்குகிறது யாக உள்ளது.

கனமழை காரணமாக ஏரிக்கு, நீர்வரத்து 4,027 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதால், கீளகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *