incomtaxவருமான வரி, விற்பனை வரி உள்பட பல்வேறு வகையான வரிகளை தாக்குதல் செய்வதற்காக வரிக்கணக்கு படிவங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை சமீபத்தில் பார்த்தோம்.  இதன் படி 14 பக்கங்கள் கொண்ட வருமான வரி தாக்கல் படிவம் தற்போது வெறும் 3 பக்கங்களாக எளிதாக்கப்பட்டு வரிதாக்கல் செய்பவர்களுக்கு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வரி செலுத்துபவர்கள் படிவத்தை எளிதில் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஐ.டி.ஆர்.1, 2, 2ஏ, 4எஸ் என நான்கு படிவங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மாத சம்பளம் பெறுபவர்கள் மட்டும் நான்கு பக்கங்களை கொண்ட ஐ.டி.ஆர்-1 என்ற படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐ.டி.ஆர்.-4 எஸ், ஐ.டி.ஆர்.-2ஏ என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாத சம்பளம், ஒன்றுக்கு மேல் வீடு வைத்துள்ளவர்கள், வீட்டு மனை சொத்துக்கள் மற்றும் இதர வருமானம் ஈட்டக்கூடியவர்கள் இந்த படிவத்தின் மூலம் வரி தாக்கல் செய்ய வேண்டும்.

2-ஏ படிவம் மட்டும் விநியோகம் செய்ய இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வரி தாக்கல் படிவத்தை ஆன்லைன் மூலமாகவும், கைப்பட விண்ணப்பம் எழுதி கொடுத்தும் பெற்று கொள்ளலாம்.

ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் இருந்தாலோ, ‘ரீபண்ட்’ அதிகமாக இருந்தாலோ ஆன்லைன் மூலம் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று அதிகாரி தெரிவித்தார். மேலும் வங்கி கணக்குகளில் இருக்கும் தொகையை குறிப்பிட வேண்டும் என முன்பு கூறப்பட்டு இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய படிவத்தில் வங்கி சேமிப்பு கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ். கோடு எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி பற்றிய தகவல்கள் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் தாக்கலும் செய்யலாம்.

English Summary:Simplified Tax Filing Forms supplies