பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின்கீழ் உள்ள சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் இந்த சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், சென்னையில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,73,252 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

இந்த முகாமை 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகள் கொண்டுள்ள தாய்மார்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *