சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில்(வ.எண்: 06006), நெல்லையில் இருந்து வருகிற மே மாதம் 1-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயில்(06007) மே 2-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

நெல்லை-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரெயில் (00603) மே மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூர்- நெல்லை சிறப்பு ரெயில் (வ.எண்.06008) எழும்பூரில் இருந்து மே 4-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லைக்கு செல்லும். நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில்(06009), மே 10-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

இதேபோல், மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(06010), மே 11-ந் தேதி(திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06013), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு செல்லும். மறுமார்க்கமாக, மதுரை-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06014), மதுரையில் இருந்து வருகிற 19-ந்தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு வந்து சேரும்.

இதேபோல், சென்னை சென்டிரல்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06011), சென்னை சென்டிரலில் இருந்து இன்று(வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு மதுரை செல்லும். மறுமார்க்கமாக, மதுரை-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (06012) மதுரையில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Special Trains between Chennai Egmore to Tirunelveli to reduce the rush of peoples during summer vacation timings.