கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி,

1. தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021):

சென்னை தாம்பரத்திலிருந்து டிசம்பர் 22ம் தேதி இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறு மார்க்கத்தில்,

2. திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022):

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து டிசம்பர் 23ம் தேதி மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06041):

சென்னை தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 23ம் தேதி இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *