கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக ரோஸ் கார்டன் உள்ளது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறையினர் மூலம் பராமரிக்கப்படும் இந்த கார்டனில், பல்வேறு வகையான ரோஜாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த ரோஸ் கார்டனில், மொத்தம் 10 ஏக்கரில் 1,500 வகையான 16,000 செடிகள் உள்ளன. இந்த செடிகளை பராமரிப்பதற்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பல வண்ணங்களில் ரோஜா பூக்கள்:
கோடை சீசனான மே மாதத்தில், ரோஸ் கார்டனில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பழுப்பு நிறம் என பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *