கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் வாரத்திற்கு 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும்; தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்று சேரும்.
