தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக ஏற்படும் வெப்பச் சலனத்தின் தாக்கத்தால், வரும் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வரு கிறது. அடுத்த சில தினங் களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியான மழை எங்கும் பதிவாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *