சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக தென் மேற்கு பருவ மழை குறைந்து வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. சில இடங்களில் வெப்ப சலன மழை மட்டும் பெய்துள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், பெரம்பலுார் மாவட்டம் வெண்பாவூரில் 5 செ.மீ., மழை பெய்தது. அரியலுார் 3; பெரம்பலுார் 2; தஞ்சை மாவட்டம், பாபநாசம் மற்றும் கும்ப கோணத்தில், 1 செ.மீ., மழை பதிவானது.

இந்நிலையில், மீண்டும், மேற்கு திசை காற்று வலுப்பெற துவங்கியுள்ளது. இதையொட்டி, வங்கக் கடலின், தென் மேற்கு பகுதியில் இருந்து, ஈரப்பதம் மிக்க மேகக் கூட்டங்கள் நகருவதால், தமிழக கடலோர பகுதிகளில், சில இடங்களில், அடுத்த இரண்டு நாட்கள் கன மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், கர்நாடகா முதல், தமிழகம் வரை பரவியுள்ள மேலடுக்கு சுழற்சியால், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *