தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு துவங்கியது. இத்துடன், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்குமான தேர்வும் இம்மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இதில், 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புக்குத் தேர்வு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பள்ளிப் பருவத்தினைக் கடந்து அடுத்தகட்ட மேற்படிப்பில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *