தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வரும் 17-ம்தேதி பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை – வேளச்சேரிக்கு வரும் 17-ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 2.35 மணி வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்படாது.

இதேபோல், வேளச்சேரி – சென்னை கடற்கரைக்கு காலை 8.10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்படாது. மொத்தம் 38 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பேசின்பிரிட்ஜ் மற்றும் வில்லி வாக்கம் பகுதிகளில் வரும் 17-ம்தேதி தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால் ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையம் செல்ல வேண்டிய 36 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சில மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக ஆவடி – பட்டாபிராம் மிலிட் டரி சைடிங், சென்ட்ரல் – அரக்கோணம், திருவள்ளூர் – சென்ட்ரலுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *