தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளத்தின் இதர பகுதிகளில் தொடங்கும்.

இலங்கை பகுதியில் இருந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. மேலும், தென் தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பதிவாகும் மழை அளவு 440 மி.மீ. ஆகும். பருவமழை நிகழாண்டில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றார் அவர்.

புழலில் 110 மி.மீ.: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் புழலில் 110 மி.மீ.. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *