திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை மகாதீபம் நாளை ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது தீபக் கொப்பறையை ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை மற்றும் அதற்கான திரி, நெய் போன்றவற்றை மலைமீது ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திற்காக, தீபம் ஏற்றும் கொப்பரையானது 5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்டது. இந்த கொப்பரை கடந்த சில நாட்களாக செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான பூஜைகள் செய்யப்பட்டு இன்று மலைமீது ஏற்றும் பணி தொடங்கியது.

இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *