திருவண்ணாமலையில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது.

அருணாசலேஸ்வரர் கோயில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை 4 மணியளவில் கோயிலின் கருவறை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதையொட்டி 6 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதிக்கப்பட்ட தீப கொப்பறை பூஜை செய்யப்பட்டு பக்தர்களால் தூக்கிச் செல்லப்பட்டது.

மகா தீபம் ஏற்றுவதற்காக 3500 கிலோ ஆவின் நெய்யும், திரியாக பயன்படுத்த ஆயிரம் மீட்டர் நீள காட்டன் துணியும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மலை உச்சிக்கு நாளை அவற்றை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *