ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 82 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தார். அடுத்த மாத இறுதிக்குள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பணிகள் முடிவுற்று அடுத்த பதினைந்து நாட்களில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *