கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, டிச. 25ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண். 82626) திருநெல்வேலியிலிருந்து டிச. 25ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக டிச. 26ஆம் தேதி காலை5.30 மணிக்கு சென்னை எழும்பூருக்குச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *