திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 76,555 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,488 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.75 கோடி காணிக்கை செலுத்தினர்.

நேற்று காலை நிலவரப்படி, வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *