சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 6,26,726 பேர் எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலியாக உள்ள 1,199 பணியிடங்களுக்கான, குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை மொத்தம் 6,26,726 பேர் எழுதியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 247 மையங்களில் 64 ஆயிரத்து 309 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர். இதேபோல் நெல்லையில் 6 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 674 பேர் இத்தேர்வை எழுதினர்.

இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தையும், ஒரு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுதவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *