தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 3ம் தேதியன்று வரைவாளர் கிரேடு III காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி, நடைபெற்று முடிந்த எழுத்துத் தேர்விற்கான மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/answerkeys.html என்னும் லிங்கில் சென்று விடைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வு குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *