தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி-யின் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *