பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் – குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு ஆகஸ்ட் 25, 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலில் (16127) கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்- சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16866) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பெங்களூரு – கொச்சுவேலி ஹம்சபர் விரைவு ரயில் (16319), கன்னியாகுமரி – புனேக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16382) உட்பட 3 விரைவு ரயில்களில் தலா ஒரு தூங்கும் இரண்டாம் வகுப்பு பெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *