chruch7116சென்னையில் உள்ள கிறிஸ்துவ மதத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயம் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தின் 200-ஆவது ஆண்டு விழா இன்று மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இது குறித்து பிரதம பேராயர் தெய்வாசீர்வாதம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சி.எஸ்.ஐ. செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் ஆலயம் 1816-ஆம் ஆண்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த ஆலயத்தின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில் மாலை 4.30 மணிக்கு சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆலயத்தின் 200 ஆண்டு கால சேவைகள் குறித்த சிறப்பு ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. மேலும், ஆலயத்தின் வரலாறு குறித்த சிறப்புரையும் வழங்கப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறினார்.

English Summary: Today 200-th anniversary of the CSI  Cathedral Church in Chennai.