திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வலம்வந்த மலையப்ப ஸ்வாமியை கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசித்தனர்.

நான்குமாட வீதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில், பிற இடங்களில் வைக்கப்பட்ட திரைகளில் சுவாமியைப் பார்த்து பக்தர்கள் தரிசித்தனர். கருடசேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *