ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

2023 ஆம் ஆண்டின் 1,105 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 12 ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. இதனை தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று (15.09.2023) முதன்மைத் தேர்வு தொடங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து, செப்டம்பர் 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது. டிசம்பரில் இதற்கான முடிவுகள் வெளியான பின்னர் நேர்காணல் தேர்வு தில்லியில் நடைபெறும்.

தேர்வு குறித்த விரிவான விவரங்களை https://upsc.gov.in/ என்ற யு.பி.எஸ்.சி.-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *