சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதனால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றதால் இந்த போக்குவரத்து மாற்றத்தை இரண்டு வருடங்களுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜிகே மூப்பனூர் மேம்பாலர் சிக்னல் சந்திப்பில் இருந்து வாகனங்கள் டிடிகே சாலையை நோக்கி வழக்கம் போல செல்லலாம். டிடிகே சாலை சந்திப்பில் இருந்து ஜிகே மூப்பனார் மேம்பாலம் சிக்னல் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே அடையாறு போட் கிளப் கேட் சாலை முதல் அவென்யூ போட் கிளப் சாலை ஆகிய சாலைகள் ஒருவனை பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏ பி எம் அவென்யூ விரிவாக்கமாகிய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அடையார் கேட்ஸ் கிளப் சாலையில் இருந்து கோடூர்புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லலாம். ஜிகே மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலையிலிருந்து டர்ன்புல்ஸ் விரிவாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிகே மூப்பனார் மேம்பாலம் சிக்னல் சந்திப்பில் இருந்து நேராக சேமியர்ஸ் சாலையில் வாகன ஓட்டிகள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *