கடலூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன்படி, புதன்கிழமை (ஆக.29) திருச்சி – சென்னை எழும்பூர் சோழன் விரைவு ரயில் (எண்-16796) திருச்சியிலிருந்து காலை 10 மணிக்குப் பதிலாக பகல் 12 மணிக்கு புறப்படும். 2.30 மணி நேரம் தாமதாக விழுப்புரத்தை வந்தடையும்.

ரயில் எண்கள் 56874 / 56875 மயிலாடுதுறை – விழுப்புரம் பயணிகள் ரயில்கள் பண்ருட்டி }விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண்கள் 56706 / 56705 மதுரை – விழுப்புரம் பயணிகள் ரயில் விருத்தாசலம் – விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல வியாழக்கிழமை (ஆக. 30) மதுரை – விழுப்புரம் பயணிகள் ரயில் (எண்கள் 56706 / 56705) விருத்தாசலம் – விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *