திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கேரள வெள்ளத்தை தொடர்ந்து திருவனந்தபுரம் பிரிவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அவ்வழியே இயக்கப்படும் சில பயணிகள் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குருவாயூர்-புனலூர் பயணிகள் ரயில் (எண்.56365/56366), கொல்லம்-புனலூர் பயணிகள் ரயில் (56334/56333), கொல்லம்-செங்கோட்டை பயணிகள் ரயில் (56336/56335) உள்ளிட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படாது. இதேபோல் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படுவதாக இருந்த மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (எண் 16344) மதுரையில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *