சென்னை : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து வருகிறது. மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து எழும்பூருக்கு வரக்கூடிய மன்னார்குடி, கன்னியாகுமரி, காரைக்கால், ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் 2 மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *