trisha-191115தமிழ் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகிகளாக விளங்கி வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. ஆனால் முதல்முறையாக தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில்தான் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர்களுக்கு முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு சக்தி வாய்ந்த பெண்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் ஹீரோவின் கதைதான் இந்த படத்தின் கரு என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்’, ‘மாயா’, ‘நானும் ரெளடிதான்’ ஆகிய வெற்றி படங்களை கொடுத்த நயன்தாராவும், அதே போல் கடந்த தீபாவளியின் ‘தூங்காவனம்’ என்ற ஹிட் படத்தில் நடித்த த்ரிஷாவும் இணையவுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அஜீத் நடித்த ‘வேதாளம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.English summary-Trisha & Nayantara to act together