சென்னை: ‘குரூப் – 4’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ‘ஸ்டெனோ டைப்பிஸ்ட்’ பதவிக்கு 13ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் – 4 பிரிவில் அடங்கிய பதவிகளுக்கு 2018 பிப்., 11ல் எழுத்து தேர்வு நடந்தது.

இதன் முடிவு ஜூலை, 30ல் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 என்ற ஸ்டெனோ டைப்பிஸ்ட் பதவிக்கு 13 முதல் 15ம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில் பங்கேற்க தகுதியானவர்கள் விபரம், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *