தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதலில் பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெற்ற 40,200 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

ஏற்கெனவே அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று(25.07.2023) காலை 10 மணி முதல் வருகிற ஜூலை 31ம் தேதி மாலை 5 மணி வரை 7 நாட்கள் இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. www.tnmedicalselection.org என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3ந்தேதி வெளியிடப்பட உள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 27ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *