Vairamuthu-Sirukathaigal-Book-Launch-Event-Stills-4ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை எழுதி, ஆறு முறை தேசிய விருதுகளை பெற்ற கவியரசர் வைரமுத்து எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூல் வெளியீட்டிற்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது, “ஒரு மொழியின் மிகச்சிறந்த வடிவம் சிறுகதை. உலகப் பேரிலக்கியமான பைபிளில் ஏராளமான சிறுகதைகள் உள்ளன. நபிகள் நாயகம் சிறுகதைகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணாவும் தனது கருத்துகளை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். நானும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். வைரமுத்து என்னை ஆசான் என்றார். நான் அவரை தம்பி என்று அழைக்கிறேன். அவர் தனது சிறுகதைகள் மூலம் சமூகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். அதற்கு தீர்வு காண முயன்றிருக்கிறார். அவரது இப் பணி தொடர வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்.

இந்த சிறுகதையின் முதல் பிரதியை கருணாநிதியிடம் இருந்து பெற்றுக்கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, ‘‘வைரமுத்து சிறுகதைகள் என்ற இந்த நூலில், சிறுகதைகளைவிட அவரது முன்னுரை என்னை ஆச்சரியப்பட வைத்தது. பெர்னாட்ஷாவின் நாடக நூல்களை அவரது முன்னுரைக்காகவே பலர் வாங்குவார்கள். அதுபோல வைரமுத்துவின் முன்னுரைக்காகவே இந்த நூலை அனைவரும் வாங்க வேண்டும். வைரமுத்து சிறுகதைகள் கவிதை நடையில் இருப்பதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள். இந்த நூல் உங்களின் சமையல். அதன் சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதி கிடையாது. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திருக்குறள்கூட ஒரு சிறு கதைதான். எனவே, கவிதை நடை என்ற விமர்சனம் குறித்து சீற்றம் கொள்ளத் தேவையில்லை’’ என்று கூறினார்.

ஏற்புரை நிகழ்த்திய வைரமுத்து பேசும்போது, ‘‘பிழையில்லாமல் தமிழ் எழுத இளம் தலைமுறையினருக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சிகள், தமிழ்க் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி நல்ல தமிழை கற்றுத்தர வேண்டும். எல்லா பள்ளி, கல்லூரிகளிலும் இலக்கிய வாசிப்பு வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதன்மூலம் நல்ல இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு, புத்தக விற்பனையில் உலகத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். உற்பத்தித் துறையில் நம்நாடு பின்தங்கி இருப்பதால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண் யதிருக்கிறது. இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’’ என்று கூறினார்.

English Summary: Vairamuthu Book Launch Ceremony in Chennai.Karunanidhi, Kamal took part.