சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்கு மிகவும் இன்றியமையாத இடங்களாக கருதப்படுவது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவைகள் என்று கூறினால் அது மிகையாகாது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வார விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் இயங்கும் இந்த இரு பூங்காக்களுக்கும் சென்னை மக்கள் மிகவும் விரும்பி செல்வர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினமாக இருப்பதால் சென்னை மக்கள் அதிகளவு இந்த இரு பூங்காக்களுக்கும் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இன்று வழக்கம்போல் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இரண்டும் செயல்படும் என பூங்கா நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

English Summary : Vandalur, Guindy parks will operate as a normal day on Tamil New Year.