தெற்கு ரயில்வே அவ்வப்போது ரயில் தண்டவாளம் உள்பட பலவிதமான பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) இரவு 9.20 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில் (வண்டி எண்:40569) தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல இரவு 11.10 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில் (40574), தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Vandalur to Guduvanchery Train timing changed due to maintenance.