சென்னை மக்களுக்கும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கும் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் பல இடங்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இரண்டு மிகவும் முக்கியமானது. இந்த இரண்டு பூங்காக்களுக்கும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினம் ஆகும்.

இந்நிலையில் வரும் 10ஆம் தேதி அதாவது நாளை தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் இந்த பூங்காக்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த இரண்டு பூங்காக்களும் தீபாவளி தினமான நவம்பர் 10-ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பூங்கா நிர்வாகிகள் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாது, “ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று பராமரிப்பு பணிகளுக்காகப் பூங்காக்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனினும் தீபாவளி பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை அதாவது நவம்பர் 10 ஆம் தேதி பூங்காகளுக்கு விடுமுறை இல்லை. எனவே, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் நாளை இந்த பூங்காக்களை தங்களின் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English Summary: Vandalur Zoo will be open on Diwali Festival. No Holiday on Tuesday this week for Vandalur Zoo on occasion of Diwali.