சென்னை ஐஐடியில் தற்போது 4 ஆண்டு பிஎஸ்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பட்டப்படிப்பு:
சென்னை ஐஐடி கடந்த 2020 ஆம் ஆண்டு இணையவழி நிரலாக்கல் மற்றும் தர அறிவியலுக்கான 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியது. இந்த பாடப்பிரிவில் 10 ,12 -ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது 4 ஆண்டு B.SC ப்ரோக்ராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 4 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு 8 மாத கால பணி பயிற்சி மற்றும் ஆய்வு திட்டம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடத்திட்ட வகுப்பில் சேர்ந்து பயனடைய விரும்புபவர்கள் மே 10ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *