ஈரோடு அருகேயுள்ள பெருந்துறையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பெண் மற்றும் ஒரு விவசாயிக்கும், பிரதிகள் வழங்கப்பட்டன.

 

 

 

  • கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி.
  • மீனவர்களுக்கு உதவித் தொகை ரூ. 5000 ஆக உயர்வு
  • 100 யூனிட் வரை மின்சார கட்டணம் இலவசம்.
  • பொங்கலை முன்னிட்டு Co-optex மூலம் 500ரூபாய் கூப்பன் வழங்க படம்.
  • நெசவாளர்கலுக்கு 200 யூனிட் வரை மின்சார கட்டணம் கிடையாது.
  • அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கைபேசி அளிக்கப்படும்.
  • அனைவருக்கும் விலை இல்ல செட்ஆப் பாக்ஸ் வழங்கபடும்.
  • பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க படும்.
  • தாலிக்கு வழங்க படும் தங்கம் 8 கிராமாக உயர்த்தப்படும்.