சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் விட்டு விட்டு மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குமரி,நெல்லை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் கடல் காற்று மணிக்கு 35 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *