திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சுவாமி சன்னிதியில் 1,008 சங்காபிஷேக சிறப்பு பூஜை இன்று (21.11.2022) நடைபெற்றது.

அண்ணாமலையார் மூல கருவறை எதிரில் சிறப்பு யாகசாலை அமைத்து 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், 1,008 சங்கு மூலம் பூஜை செய்யப்பட்ட புனித நீரைக் கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *