பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு புதிய விதிகளை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதில் முக்கியமாக மாணவர்கள் நீளம் மற்றும் கருப்பு மை மட்டுமே விடைத்தாளில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

செய்யக்கூடியவை:

  • விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும்.
  • விடைத்தாளின் இரு புறத்திலும் எழுத வேண்டும்.
  • விடைத்தாளில் எதுவும் எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட வேண்டும்.
  • இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
  • விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
  • வினாத்தாளின் வரிசை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
  • முறைகள் எல்லாம் விடைத்தாளின் பகுதியில் இடம்பெற வேண்டும்.
  • கேள்வியின் எண் தவறாமல் எழுத வேண்டும்.
  • விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை பேனாக் களால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும்.

செய்யக் கூடாதவை:

  • விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.
  • வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
  • விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது.
  • விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது.
  • விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது.
  • கலர் பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது.

English Summary : Examination center sets rules for 10th and +2 public exams. Students should use only blue and black ink in the answer paper.