தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 11.15 மணிக்கு தொடங்கியதும், ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையில் மேம்பாலம் பாதையில் விரைவில் ரயில் சேவைகள் தொடங்கப்படும். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

English Summary : Metro Rail between Koyambedu and Alandur will start as soon as possible says Governor Rosaiah in TamilNadu assembly meeting.