Tamilnadu-School-Education-Department
இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே மாதம் 14-ம் தேதி பள்ளிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டன.

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.

English Summary:12th Original Marksheet will distribute from today