பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ‘2.0 என்ற படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார் சற்று முன்னர் லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் பாலிவுட் படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ள அக்ஷயகுமாரிடம் முறையான ஸ்டாம்புகளுடன் கூடிய விசா இல்லை என்றும் அவரிடம் சுற்றுலா பயணிகளிடம் இருக்கும் சாதாரண விசா இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் லண்டன் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்சயகுமாரை தனி அறையில் வைத்து விசாரணை செய்யாமல் கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் உட்கார வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லண்டனில் இருக்கும் ‘2.0 படத்தின் தயாரிப்பாளர் அக்ஷயகுமாரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என தெரிகிறது.

English Summary: 2.0 Villain got arrested in London.