தமிழகத்தில் நடைபெற உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளவர்களிடம் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தவிருக்கிறார்.

இந்த நேர்காணலின்போது அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பகுதிச் செயலாளர்கள் மட்டும் கலந்துகொண்டு தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புக் குறித்து கருத்துக் கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *