மதுரை மாவட்டம் வடபழஞ்சி கிராமத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலக் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக புதிய கட்டடத்தைத் திறந்தார். இந்தக் கட்டடம் 71 ஆயிரத்து 482 சதுர அடி பரப்பு கொண்டது.

சென்னை சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் புதிய கட்டடத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

புகளூர் புதிய வட்டம்: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம், அரவக்குறிச்சி வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வேலாயுதம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னிலை, க.பரமத்தி, புகளூர் ஆகிய குறுவட்டங்களுடன் புதிதாக புகளூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வட்டத்தை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *